ஐரோப்பா

காலநிலை மாற்றம் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க குழு நியமனம் – ஸ்பெயின் ஒப்புதல்

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் காடுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் அல்லது வழிக்காட்டுதல் நெறிமுறைகளை  வழங்கும் குழுவை நியமிக்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தீர்மானம் நேற்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் கோடைக்காலப்பகுதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்தக் குழு இலையுதிர் காலத்தில் தனது பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அரசாங்கத் துறைகளால் எழுப்பப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, இந்தப் பணிக்குழு சுதந்திரமான, கடுமையான மற்றும் பல்துறை பகுப்பாய்வை வழங்கும், எனவும் கூறப்படுகிறது.

ஸ்பெயின், முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ அலையை எதிர்த்துப் போராடிவருகின்றது. அங்கு இதுவரை 77,000 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி நாசமாகியுள்ளதுடன், 63,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 35000 இற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை முற்றாக இழந்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்