உலகம்

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு – சஜித் அழைப்பு

  • September 13, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரு் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள்  கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட 22-வது […]

இலங்கை

சிறைச்சாலை கலவரங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சஜித் விசனம்

  • August 7, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று  (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யார் என்ன தெரிவித்தாலும் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அதில் அமைச்சருக்கு […]

இலங்கை

சிறைச்சாலைக்கே பாதுகாப்பு இல்லை – மக்களின் நிலமை என்ன? : சஜித் கேள்வி

  • July 8, 2026
  • 0 Comments

சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் 220 லட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த போகிறது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (7.7) இடம்பெற்ற  சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை பிரகடன […]

இலங்கை

சிறைச்சாலை வன்முறை – வெளிப்படையான விசாரணைக்கு சஜித் அழைப்பு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் நிறுவனத் திறமையின்மையையு காரணமாக குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​சிறைகளுக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் […]

இலங்கை

பாகிஸ்தானுக்கு முடியுமென்றால் நம்மால் முடியாதா? – சஜித் கேள்வி

  • June 21, 2026
  • 0 Comments

எண்ணெய் விலையைக் குறைப்பது நாட்டின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும். எனவே  எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கண்டிக்கு விஜயம் செய்த அவர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “உலகில் எண்ணெய் விலை குறைந்ததால் பாகிஸ்தானால் அதைச் செய்ய முடியுமென்றால், நம் நாட்டினால் ஏன் முடியாது? மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சுகளின் காலம். பொய்களை […]

இலங்கை செய்தி

ஐ.ம.ச வும் ஐ.தே.க வும் ஒன்றிணைந்தன – உறுதிப்படுத்திய சஜித்

  • May 1, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியும்ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற மே தினப் பேரணியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பதற்காக குழு ஒன்றை […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி விலக தயார்: ரணில் அறிவிப்பு! ஐதேக தலைமைப் பதவியை ஏற்பாரா சஜித்?

  • December 18, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்கு தான் தான் தடையென கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தாரென சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. எனினும், […]