AI படையை நிர்மாணிக்கும் ட்ரம்ப் – பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் புறக்கணிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு செயற்கை நுண்ணறிவுப் படையை (AI Force) நிறுவி அதனைக் கண்காணிக்க AI ஜார் (AI Czar)-ஐ நியமிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை புரளி எனக் கூறி நிராத்துள்ள ட்ரம்ப், அந்தத் தொழில்நுட்பம் நசுக்கப்படக்கூடாது எனவும் வாதிட்டுள்ளார்.
இதற்கிடையே இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, செயற்கை நுண்ணறிவுப் பிரச்சினைகளை ட்ரம்ப் கையாளும் விதத்தை பெரும்பாலான அமெரிக்கர்கள் ஏற்கவில்லை என்று சமீபத்திய பொதுக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவேளை ஜனநாயகக் கட்சி செனட்டர் எலிசபெத் வாரன் Elizabeth Warren இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
மேலும் மற்றொரு குழுவை அமைப்பதற்குப் பதிலாக அர்த்தமுள்ள விதிமுறைகளை இயற்றுமாறு காங்கிரஸைக் கேட்டுக்கொண்டுள்ளார்.




