பாகிஸ்தானுக்கு முடியுமென்றால் நம்மால் முடியாதா? – சஜித் கேள்வி
எண்ணெய் விலையைக் குறைப்பது நாட்டின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும். எனவே எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்த அவர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் எண்ணெய் விலை குறைந்ததால் பாகிஸ்தானால் அதைச் செய்ய முடியுமென்றால், நம் நாட்டினால் ஏன் முடியாது?
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சுகளின் காலம். பொய்களை நம்பி அரசாங்கம் வாழ்கிறது. பொய்கள் நீண்ட காலம் நீடிக்காது.
நாம் நிமிர்ந்து நின்று மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால், இந்த அரசாங்கத்திற்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை நம்மால் பார்க்க முடியும்.” என்றார்.




