இலங்கை

பாகிஸ்தானுக்கு முடியுமென்றால் நம்மால் முடியாதா? – சஜித் கேள்வி

எண்ணெய் விலையைக் குறைப்பது நாட்டின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும். எனவே  எண்ணெய் விலைகளைக் குறைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்த அவர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “உலகில் எண்ணெய் விலை குறைந்ததால் பாகிஸ்தானால் அதைச் செய்ய முடியுமென்றால், நம் நாட்டினால் ஏன் முடியாது?

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சுகளின் காலம். பொய்களை நம்பி அரசாங்கம் வாழ்கிறது.  பொய்கள் நீண்ட காலம் நீடிக்காது.

நாம் நிமிர்ந்து நின்று மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால், இந்த அரசாங்கத்திற்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை நம்மால் பார்க்க முடியும்.” என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்