உலகம்

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு – சஜித் அழைப்பு

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வரு் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள்  கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒரு கட்சி ஆட்சியை நிறுவ ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக  குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சிதைக்க அனுமதிக்கப்படாது என்று வலியுறுத்திய அவர்,  அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து முற்போக்கு சக்திகளிடமும் பொதுமக்களிடமும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்