ஐரோப்பா

புட்டினுக்கு நிபந்தனை : இலக்கு மாறாமல் இருக்கும் ரஷ்யா

  • June 30, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இல்லையெனில் மேலும் தாமதங்களையும், அதிக வீரர்களின் தியாகத்தையும் சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் ரஷ்யா மீண்டும் மீண்டும் தோல்வியடைவதை கேலி செய்துள்ளதுடன், மொஸ்கோ நிர்ணயித்த 15 காலக்கெடுக்கள் தவறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உக்ரைன் தனது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ரஷ்யா ஒரு ஆழமான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. […]

ஐரோப்பா

ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்ட வரிசையில் மக்கள்

  • June 29, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடக்கும் போர் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், ரஷ்யா ஒரு வளர்ந்து வரும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலைமையை கையாள்வது தொடர்பில் இன்றைய தினம் புட்டின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது  எரிபொருள் பற்றாக்குறையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதோடு, உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த டீசல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் இயங்கினாலும், எரிபொருள் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில், பீரங்கி அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் ஆலை மீது நேற்றிரவு உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஃபிளமிங்கோ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதல்களால் டைட்டன்-பரிக்காடி ஆலையின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்  ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் விளாடிமிர் பகுதியில் உள்ள “வ்டோரோவோ” எண்ணெய் இறைக்கும் நிலையம் மீதும் உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. […]

ஐரோப்பா

ரஷ்யா மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய உக்ரைன்

  • June 26, 2026
  • 0 Comments

போர்முனையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளைக் குறிவைத்து, ரஷ்யாவின் எரிசக்தித் துறையை இலக்காகக் கொண்ட புதிய தொடர் தொலைதூரத் தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள போல்டாவ்ஸ்கா எண்ணெய் கிடங்கும், உஃபா நகரில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதல்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட உஃபா நகரில் உள்ள பாஷ்நெஃப்ட்-உஃபானெஃப்டெகிம் மற்றும் பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையங்கள், தற்போதைய போர் முன்னணியிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. ரஷ்யப் பிரதேசத்தின் ஆழமான […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு

  • June 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 15.4 கிலோமீட்டர் (9.5 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஒருங்கிணைந்த புவி இயற்பியல் சேவை தகவல் தெரிவித்துள்ளது. மேற்படி நிலநடுக்கத்தின் அதிர்வானது துறைமுக நகரத்திலும்  உணரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இதற்கிடையே கம்சட்கா கடற்கரைக்கு அப்பால் 06:51 UTC மணிக்கு 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, உயிரிழப்புகள் […]

ஐரோப்பா

ரஷ்யாவை மூர்கமாக தாக்கிய உக்ரைன் – 555 ட்ரோனகள் ஊடுறுவல்

  • June 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையொன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக  கிரெம்ளின் குற்றம் சாட்டிள்ளது. நேற்று இரவு ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் 555 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் ஊடுறுவியதாகவும், அவற்றை  தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தலைநகரைக் […]

ஐரோப்பா செய்தி

எண்ணெய் டேங்கர் – நிழல் கப்பல்படை வரை : ரஷ்யா மீது புதிய அழுத்தம்

  • June 17, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முதலாம் உலகப் போரை விட நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த மோதலில், போர்க்களத்தில் உக்ரைன் சிறப்பாகச் செயல்பட்டாலும், அதன் நகரங்கள் இன்னும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இந்நிலையில்  எரிவாயு மற்றும் எண்ணெய் மீதான தடைகள் மூலம் ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர். களத்தில் உக்ரைனுக்குச் சாதகமான ஒரு சூழல் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் குவிந்த முதலீட்டாளர்கள் : செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் தாக்குதல்!

  • June 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்  ( St Petersburg) புறநகர்ப் பகுதிகளில் உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 130 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகை தந்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 59 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் […]

ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார். போர் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தலைத்தூக்கியுள்ள பட்ஜெட் பிரச்சினை!! போர் செலவீனத்தை முடக்க அறிவுரை!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில் நேற்று இரவு ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்கள் பலர்  குண்டுவெடிப்புத் தடுப்பு முகாம்களிலும், நிலத்தடி மெட்ரோ நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கீவ் நகரில் பெரிய வெடிப்புகளும், புகை மண்டலங்களும் ஏற்பட்டதாகவும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  (Vitali Klitschko) தெரிவித்தார். இதற்கிடையே போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான […]