சௌடெல் புயல் எதிரொலி – சீனாவில் நிலச்சரிவு : 11 பேர் மாயம்
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நகரில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌடெல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, இந்த மண்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




