ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி: ஈரான் எச்சரிக்கை

  • August 25, 2026
  • 0 Comments

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்றும் தெஹ்ரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க திறைசேரிச் செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் இப்புதிய தடைகளை திங்கள்கிழமை அறிவித்தார். இருப்பினும், ஈரானுடன் தொடர் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள […]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த ஆர்வம்: அமெரிக்காவின் புதிய தூதுவர் கடமையேற்பு

  • August 25, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார். அவர் இலங்கைக்கான 29வது அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எரிக் மேயர், “இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கௌரவமாகும். நமது இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடித்தளத்தின் மீது, அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும், மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்கள் இருவருக்கும் பெரும் செழிப்பை வழங்கும் ஒரு […]

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

2029 இல் NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: தேரர் சூளுரை

  • August 25, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்சவை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார். இது தொடர்பில் தேரர் மேலும் கூறியவை வருமாறு, “இந்த அரசாங்கம் பிக்குகளை மதிப்பதில்லை. நாட்டை மீட்ட படையினரையும் விமர்சித்துவருகின்றனர். இந்நாட்டில் தலைவர்களை பிக்குகளே அன்று முதல் இன்றுவரை […]

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு

  • August 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது. Common App அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, விண்ணப்பங்களில் கடும் சரிவு 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை சேர்க்கைக்கான ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் […]

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா உலகம் செய்தி

மோடியின் அழைப்பை புடினிடம் கையளித்தார் ஜெய்சங்கர்

  • August 25, 2026
  • 0 Comments

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு ‘X’ பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். […]

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். இலங்கை செய்தி

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

  • August 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப் […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு திகதி நிர்ணயம்

  • August 25, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த […]

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா உலகம் செய்தி

7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது. 2020 ஆம் […]

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். ‘விருப்பமுடையோரின் கூட்டமைப்பு’ (Coalition of the Willing) மாநாட்டை இணை-தலைமேற்று நடத்திய தனது முதலாவது கூட்டத்தின் தொடக்க உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “உக்ரைன் மக்களுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதப் பிரசாரத்தை […]

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: செப்.22 இல் வழக்கு தீர்ப்பு

  • August 24, 2026
  • 0 Comments

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – […]