ஈரானின் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி, நாட்டின் தலைமை நீதிபதியாக கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேஇ-யை (Mohseni-Ejei) மீண்டும் நியமித்துள்ளார். உலகம் செய்தி

இறுதிச்சடங்குக்கு மத்தியில் ஈரானில் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

  • July 7, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி, நாட்டின் தலைமை நீதிபதியாக கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேஇ-யை (Mohseni-Ejei) மீண்டும் நியமித்துள்ளார். மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கு மத்தியில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் நீதித்துறை மாற்றங்களை முன்னெடுக்குமாறு புதிய தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடருமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். நாட்டின் இலக்குகளை அடைவதற்கும், தலைவரின் படுகொலைக்கு பழிவாங்குவதற்கும் தான் உறுதியாக இருப்பதாக எஜேஇ மாநில […]

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் பயணத்துக்கு மத்தியில் சிரியாவில் குண்டு வெடிப்பு

  • July 7, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, நகரின் வான்பரப்பில் அடர்ந்த புகைமூட்டம் எழும்புவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு பகுதியிலேயே இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை ஒரு “குற்றச்செயல்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதில் பொதுமக்கள் […]

ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடன் வேண்டும்: நேட்டோவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை

  • July 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் அவர் இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இருவேறு ஏவுகணைத் தாக்குதல்களில், குடியிருப்பு வளாகங்கள் தரைமட்டமாக்கப்பட்டு 50-இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கியின் இந்த உதவிக்கான குரல் […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்- நாடாளுமன்றில் இன்று அனல் பறக்கும் விவாதம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய விவாதம் நடைபெறுகின்றது. மேற்படி விவாதத்துக்கு எதிர்க்கட்சி தலைவர், 4 மணித்தியாலங்களை கோரி இருந்தாலும், ஆளுங்கட்சியால் 3 மணிநேரமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, சிறைச்சாலை மோதல் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.  

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: பலி எண்ணிக்கை உயர்வு

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்து, நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலையில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல கைதிகளில், தற்போதைய பலியானவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவல்படி, இதுவரை உயிரிழந்தவர்களில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு […]

" சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தின் சுயாதீனத்தில் கையடிப்பு: எதிரணி குற்றச்சாட்டு

  • July 7, 2026
  • 0 Comments

” சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “இலங்கையை ஆட்சிசெய்த தலைவர்கள் சட்டத்தின் சுயாதீனத்தன்மையில் கையடிக்கவில்லை. அவ்வாறு கையடித்த தரப்பினருக்கு கடைசியில் வீட்டுக்கு செல்ல நேரிட்டது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவின் அணு ஆயுதப் பாய்ச்சல்: கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா

  • July 7, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைக்கு (ICBM) சாலமன் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது, பசிபிக் பிராந்தியத்தில் […]

Belgium beats USA செய்தி விளையாட்டு

அமெரிக்காவை வீழ்த்தியது பெல்ஜியம்

  • July 7, 2026
  • 0 Comments

சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2026 ஆட்டத்தில் அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி கால்இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. சார்லஸ் டி கெட்டேலாரே (Charles De Ketelaere) அடித்த இரண்டு கோல்கள், ஹான்ஸ் வனாகன் (Hans Vanaken) தனது உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு செய்த முதல் கோல் மற்றும் மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நேரத்தில் அடித்த கோல் ஆகியவை பெல்ஜியம் […]

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. செய்தி விளையாட்டு

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்: வெளியேறியது போர்த்துகள்

  • July 7, 2026
  • 0 Comments

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் மூலம் போர்த்துகள் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை பயணம் ஏமாற்றத்துடன் முடிவடைந்தது. எனினும், தனது சர்வதேச கால்பந்து எதிர்காலம் குறித்து அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க அவர் தயாராக இல்லை. திங்கள்கிழமையன்று ‘மிக்ஸட் ஜோன்’ (Mixed Zone) பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, மாற்று வீரராக […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

நாளை ஆஸ்திரேலியா செல்கிறார் மோடி – பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமுகத்தினர், நாளை வியாழக்கிழமை மெல்போர்னுக்கு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பிரம்மாண்டமான பாலிவுட் பாணி நிகழ்வோடு வரவேற்க தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஜூலை 8 முதல் […]