அணுவாயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா – அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எச்சரிக்கை
வடகொரியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் பிற நாடுகளில் பணியமர்த்தப்படுவதற்கு எதிராக அமெரிக்காவும் 10 ஆசிய மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளன. வடகொரிய அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்காக இந்த முறையை கையாள்வதாகவும், இதன்மூலம் பெறப்படும் வருவாய் நாட்டின் அணுவாயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அந்நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், வட கொரியாவின் சட்டவிரோத அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக” அந்நாடு திறமையான தொழிலாளர்களைப் போலி அடையாளங்களின் […]













