கிழக்கு கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா
வட கொரியா இன்றைய தினம் கிழக்கு கடற்பகுதியில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.
பியோங்யாங் ஏவிய ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான கிம் யோ ஜாங், ஜப்பானின் டோமஹாக் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அதன் இராணுவ லட்சியங்கள் குறித்து சமீபத்தில் கடும் விமர்சனம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.





