உலகம்

கிழக்கு கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்த வடகொரியா

வடகொரியா இன்றைய தினம் கடலைநோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக ஜப்பான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியா இந்த மாதத்தில் முற்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

அமெரிக்காவும், தென்கொரியாவும் அடுத்த வாரம் வருடாந்திர போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள நிலையில், வடகொரியா இவ்வாறான ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்