வடகொரியாவை இணைக்கும் ரயில் பாதையை புனரமைக்க தென்கொரியா திட்டம்
2015-ல் தொடங்கப்பட்டு 2016-ல் இடைநிறுத்தப்பட்ட, கியோங்வோன் (Gyeongwon) ரயில் பாதையை புனரமைக்கும் பணியை தென்கொரியா மீண்டும் தொடங்கவுள்ளது.
இந்த ரயில் பாதையானது, இறுதியில் வட கொரியாவின் கிழக்கு நகரமான வொன்சானுடன் (Wonsan ) இணைவதையும், இராணுவமயமற்ற மண்டலத்தில் உள்ள அமைதி மற்றும் சூழலியல் சுற்றுலாத் தளங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பியாங்யாங், தென் கொரியாவை ஒரு விரோத நாடாக மறுவரையறை செய்யும் விதமாக, 2024-ல் எல்லை தாண்டிய சாலை மற்றும் ரயில் இணைப்புகளை தகர்த்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தென்கொரியா, வடகொரியாவுடனான உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இதற்கு வடகொரியா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் உள்ள சவால்களை தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) ஒப்புக்கொண்டாலும், அமைதி மற்றும் சகவாழ்வைத் தொடர்வதன் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





