பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கடும் வறட்சி: இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 12,047 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 6,842 பேரும், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் பேரும் 151, இரத்தினபுரியில் 1,374 […]

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை உத்தரவைத் தொடர்ந்து, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் தனது அடுத்தகட்ட முயற்சியாக, சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் முகப்புப் பக்கங்களில் (feeds) பார்க்கும் உள்ளடக்கங்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட முன்மொழிவை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய சமூக ஊடக சட்டம்: பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு

  • September 8, 2026
  • 0 Comments

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை உத்தரவைத் தொடர்ந்து, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் தனது அடுத்தகட்ட முயற்சியாக, சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் முகப்புப் பக்கங்களில் (feeds) பார்க்கும் உள்ளடக்கங்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட முன்மொழிவை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி (Labor government) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைவுச் சட்டங்களின் கீழ், சமூக ஊடக தளங்கள் பயனர்களுக்குத் அறியத் தருவதோடு, அவர்களின் இயல்புநிலை முகப்புப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்க வேண்டும். பயனர்கள் […]

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தியா செய்தி தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

  • September 8, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு பதிலளித்​துப் பேசிய முதல்​வர் விஜய், திமுக மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கடுக்​காக முன்​வைத்​தார். இந்தக் கூட்டத்தொடரின் […]

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது. இந்தியா செய்தி

டெல்லியில் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5 அதிகாரிகள் பணி நீக்கம்

  • September 8, 2026
  • 0 Comments

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது. இந்த விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்​த​தாக முதற்​கட்ட தகவல் வெளியான நிலை​யில், மேலும் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​தது. மேலும், 5 பேர் மருத்​து​வ​மனை​யில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்​களில் சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக […]

“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இலங்கை செய்தி

NPPஆட்சியில் சிறந்த வெளிவிவகாரக் கொள்கை கடைபிடிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தொடர்புகள் இருக்காது என்றும், நாடு தனிமைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் காலத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று அனைத்து நாடுகளுடனும் எமது அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. தெற்காசியாவில் அனைத்து நாடுகளும் நேசிக்கும் […]

ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யா, ஜெர்மன் இடையே ராஜதந்திர மோதல் உக்கிரம்

  • September 8, 2026
  • 0 Comments

ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும், பெர்லினில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தையும் மூட பெர்லின் நிர்வாகம் எடுத்த முடிவுக்குப் பதிலடியாகவே, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள தூதரகத்தை மூடும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ஜெர்மனி […]

“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?” இலங்கை செய்தி

புலிகளுக்கே அஞ்சாத மஹிந்தவின் மகன்தான் நாமல்: அநுர அரசுக்கு அஞ்சுவாரா என்ன?

  • September 8, 2026
  • 0 Comments

“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “இந்த அரசாங்கம் தவறான இடத்தில் கை வைத்துவிட்டது. சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனையே மஹிந்த ராஜபக்ச பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் எனச் சூளுரைத்து, போரையும் […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

  • September 8, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் பாதைகளில் அவ்வப்போது போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பிரமுகரின் நடமாட்டம் மற்றும் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைப் பொறுத்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்தியப் பாதுகாப்பு ராஜ்நாத் சிங் இன்று இலங்கை வந்து, கட்டுநாயக்கவில் உள்ள […]

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'லேபர் டே' (Labor Day) விடுமுறை தினத்தின் தொடக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்றுவதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீம்களைப் (memes) பகிர்ந்துள்ளார். உலகம் செய்தி

‘நியூ மெக்சிகோ’ இனி ‘நியூ அமெரிக்கா’? – டிரம்ப்பின் யோசனைக்கு கடும் எதிர்ப்பு

  • September 8, 2026
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘லேபர் டே’ (Labor Day) விடுமுறை தினத்தின் தொடக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்றுவதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீம்களைப் (memes) பகிர்ந்துள்ளார். திங்களன்று, நியூ மெக்சிகோவின் நிலப்பரப்பை ‘நியூ அமெரிக்கா’ என்று பெயர் மாற்றி சித்தரிக்கும் பல அமெரிக்க வரைபடங்களை டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , இந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான ஆலோசனைகள் தமக்கு […]

நேபாள பேரழிவு வெள்ளம்: 1,300 க்கும் அதிகமானோர் பலி - தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு உலகம் செய்தி

1,300 க்கும் அதிகமானோர் பலி – நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கில் உயிரிழந்த 1,300-க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு தழுவிய அளவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 13 நாட்கள் நிறைவடையும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேபாள அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்து பாரம்பரிய முறைப்படி, துக்க காலத்தின் இறுதி நாளான 13-ஆம் நாளில், […]