இந்தியா செய்தி

டெல்லியில் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5 அதிகாரிகள் பணி நீக்கம்

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது.

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது.

இந்த விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்​த​தாக முதற்​கட்ட தகவல் வெளியான நிலை​யில், மேலும் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​தது.

மேலும், 5 பேர் மருத்​து​வ​மனை​யில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்​களில் சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக தெரி​கிறது. இதனால் உயி​ரிழப்பு மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

விபத்​துக்​குள்​ளான கட்​டிடத்​தில் இன்​னும் சில மாணவர்​கள் சிக்​கி​யிருக்​கலாம் என நம்​பப்​படு​வ​தால் 2-வது நாளாக நேற்​றும் மீட்பு பணி​கள் தொடர்ந்​தன.

முதல்வர் ரேகா குப்தா நேற்று நேரில் சென்று மீட்​புப் பணி​களை ஆய்வு செய்​தார். கட்​டிடத்​தின் அடித்​தளத்​தில் தண்​ணீர் தேங்​கியதும், 50 ஆண்​டு​கள் பழமை​யான அந்​தக் கட்​டிடத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட மறுசீரமைப்​புப் பணி​களுமே விபத்​துக்​குக் காரணம் என அவர் தெரி​வித்​தார்.

“விபத்து தொடர்​பாக நீதி விசா​ரணை நடத்​த​வும், கட்​டிட உரிமையாளர் மீது வழக்​குப் பதிவு செய்​ய​வும் உத்தரவிட்டுள்ளேன்” என்​றார்.

விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி துணை ஆணை​யர், செயல் பொறி​யாளர், கண்​காணிப்​புப் பொறியாளர், உதவிப் பொறி​யாளர் மற்​றும் இளநிலைப் பொறியாளர் ஆகிய 5 அதி​காரி​களை பணி இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்டுள்ளது.

கட்​டிட உரிமை​யாள​ரான 81 வயதான ஹரி​ராம் குப்தா நேற்று ராஜஸ்​தானின்​ பிவாடி நகரில்​ கைது செய்​யப்​பட்டுள்ளார். மேலும் அவரது மனைவியையும் மகனையும் போலீஸார் கைது செய்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி