பொறுப்புக் கூறலில் NPP அரசு ஆமை வேகம்: சாணக்கியன் சீற்றம்
“பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியாகச் செயற்பட்டிருந்தால், நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்களுக்கு இன்று கூட்டங்களை நடத்த வெளியில் இருந்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழிகள் குறித்து இதுவரை தெளிவான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சாணக்கியன் எம்.பி. […]













