இலங்கை செய்தி

நாமல் சிறையில் அடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கொண்டாட்டம்

வடக்கில் உள்ள விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாட்டில் வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு வேறொரு சட்டமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

வடக்கில் உள்ள விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நாட்டில் வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு வேறொரு சட்டமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியடையலாம்.

ஆனால், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது விகாரைகளில் இருந்து பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டு வருகின்றது. விகாரைகளுக்குச் செல்லும் மக்களும் தடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலைமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வடக்கில் ஒரு சட்டமும் தெற்கில் வேறொரு சட்டமும் நடைமுறையில் இருக்க முடியாது. இலங்கை என்பது ஒரே நாடாகும். புலம்பெயர் டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப இந்நாட்டை ஆள முடியாது; அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என சாமர சம்பத் தசநாயக்கதெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை