கோழிப்பண்ணைமீது நரிக்கு ஏன் அக்கறை? கடுப்பாகிய நீதி அமைச்சர்
நீதித்துறை பற்றி எதிரணி உறுப்பினர்கள் பேசுவதானது, கோழிப்பண்ணை மீது நரி அக்கறை காட்டுவது போல் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். கடந்த காலங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு விதத்திலும், சாதாரண மக்களுக்கு வேறு விதத்திலுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கட்சி தாவினால் வழக்குகள் மாயமாகும் நிலையும் அன்று […]













