சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி: பாதுகாப்பை பலப்படுத்த மாற்றுவழி தேடுகிறது ஐஸ்லாந்து
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மக்கள் வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் தோர்கெர்டூர் குன்னார்ஸ்டோட்டிர் (Thorgerdur Gunnarsdottir) தெரிவித்துள்ளார். இதற்காக இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது ஆகிய விருப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வைத்த […]













