எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் சஜித் அவசர சந்திப்பு

  • August 19, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் […]

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் இலங்கையை சுருட்டி வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது . இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய […]

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். உலகம் செய்தி

ஈராக்கில் களமிறங்கினார் ஈரான் சபாநாயகர்: பின்னணி என்ன?

  • August 19, 2026
  • 0 Comments

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஈராக் அதிகாரிகளையும், ஈரானின் ஆதரவு பெற்ற அரசியல் கூட்டணியின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் போராளிக் குழுக்கள், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரக இலக்குகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையான உறவைப் பேண முயலும் பாக்தாத் அரசாங்கத்திற்கு அழுத்தம் […]

வடக்கு மாகாண புதிய பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு இலங்கை செய்தி

வடக்கு மாகாண புதிய பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

  • August 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த […]

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் EHang நிறுவனத்தினால் இந்த ட்ரோன் சேவை செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். முதல் கட்டத்தின் கீழ் கொழும்பில் இருந்து தெற்கு கடற்கரை பிரதேசத்திலுள்ள இடங்கள் வரையிலும் கட்டுநாயக்கவில் இருந்து துறைமுக நகரம் வரையிலும் ட்ரோன் சேவை முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், அவசர அனர்த்த சேவைகளுக்காக பயன்படுத்துதல் மற்றும் கடல்சார் […]

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி

கனடாமீதான 50 சதவீத வரியை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

  • August 19, 2026
  • 0 Comments

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த தடைகள் அமுலுக்கு வர சில மணி நேரங்களே இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அவகாசத்தை […]

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை உடன் நடத்தவும்: உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

  • August 19, 2026
  • 0 Comments

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார். இது, 2022 பிப்ரவரியில் ரஷ்யாவுடன் போர் தொடங்கியதற்குப் பிறகு, ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கியின் நிர்வாகத்திற்கு எழுந்துள்ள மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. “ஜனநாயகத்தை ரஷ்யாவிடமும் பணயமாக வைக்க முடியாது” என்று 35 வயதான பெடோரோவ் செவ்வாய்க்கிழமை யூடியூபில் (YouTube) வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாம் ஒரு சுதந்திரமான ஐரோப்பிய நாடாகத் தொடர்ந்து […]

TID arrests man over alleged fake LTTE Training Camp claim இலங்கை செய்தி

‘விடுதலைப் புலிகள் முகாம்’ குறித்து வதந்தி பரப்பிய நபர் கைது

  • August 19, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலமும், ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் சந்தேகநபர் இந்த போலித் தகவல்களைப் பரப்பியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, அக்கரயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் எல்.டி.டி.ஈ […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாட்களாக சுருக்கப்பட்ட அமெரிக்கா – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி

  • August 19, 2026
  • 0 Comments

தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5 நாட்களாகக் குறைக்கப் போவதாகவும், களப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் இரு நட்பு நாடுகளும் புதன்கிழமை தெரிவித்துள்ளன. கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியாவிற்கு வருகை தரும் நிலையில் […]

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தியா செய்தி

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

  • August 19, 2026
  • 0 Comments

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதி மக்கள் நெருக்கடி […]