செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் இலங்கையை சுருட்டி வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது .

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களும், இலங்கை அணி 284 ரன்களும் எடுத்தன.

தொடர்ந்து 178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 193 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ரன்களுக்கு சுருண்டதால் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை (6/55) வீழ்த்தி மிரட்டினார். இப்போட்டி முழுவதும் அபாரமாக பந்துவீசிய அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளைக் (4/76 & 6/55) கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி