இலங்கையில் டெங்கு நோயினால் இதுவரை 71 பேர் பலி
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 49,290பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய மாகாணத்தில் 8, 409 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,639 பேரும், ஊவா மாகாணத்தில் 2, 605 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]













