இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

  • April 27, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுதது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக அந்த பகுதிக்கு நேற்று(26) காலை சென்றிருந்த போது பெண்ணொருவருடன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அவரை நோக்கி குறித்த பெண் கல்வீச்சு தாக்குதலை […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிளை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

  • April 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் இரவு விருந்தின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேக நபர், கலிபோர்னியா (California) மாநிலத்தின் டொரன்ஸ் (Torrance) பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் (Cole Thomas Allen) என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப் (Trump) நிர்வாக உறுப்பினர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (Attorney General) டாட் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் அதிக நேரம் வீணாகிறது – அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் 

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தொடர்பான சர்ச்சை குறித்து அதிக நேரம் செலவிடப்படுவதாக அமைச்சரவை அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில், மண்டேல்சனின் விவகாரத்திலேயே கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறினார். மேலும், மண்டேல்சனின் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்பது கடந்த வாரமே தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

இலங்கை செய்தி

வவுனியாவில் தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வநாயகத்தின் 49 ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இந்த நிகழ்வுது இடம்பெற்றிருந்தது. இதன்போது, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் கட்சி […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 02 வயது சிறுமியை பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது

  • April 26, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை அவரது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளுக்கும் தடுப்பு காவல் 

  • April 26, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார். இந்நிலையில், […]

உலகம் செய்தி

போரால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைவு – மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வாரக்கணக்கில் நீடித்த போரின் தாக்கத்தால், ஈரானின் உட்கட்டமைப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரால் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 125,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எஃகு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நிலையற்ற போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இலங்கை செய்தி

இலங்கையில் தென்படவுள்ள விண்கல் மழை – விண்வெளி ஆர்வலர்களுக்கு அரிய தருணம்

  • April 26, 2026
  • 0 Comments

வருடந்தோரும் விண்வெளி ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற ‘ஹேலி வால்நட்சத்திரம்’ விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது. இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும். இந்த விண்கல் […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான மண்டபம் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்காது

  • April 26, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் தற்போது கட்டப்பட்டு வரும் மிக உயர்தர பாதுகாப்பு வசதிகள் கொண்ட மண்டபம் இருந்திருந்தால், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 150 ஆண்டுகளாக இராணுவமும் பல ஜனாதிபதிகளும், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பெரிய மற்றும் பாதுகாப்பான மண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அந்த மண்டபத்தில் உயர் […]