செய்தி

போரால் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் – ஸ்வீடன் எச்சரிக்கை

  • April 28, 2026
  • 0 Comments

போர்நிலை காரணமாக ஜெட் எரிபொருள் (Jet Fuel) பற்றாக்குறை உருவாகக்கூடும் என ஸ்வீடன் (Sweden) அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடனின் எரிசக்தி அமைச்சர் எப்பா புஷ் (Ebba Busch) இதனைத் தெரிவித்துள்ளார். மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், ஸ்வீடனில் விமான எரிபொருளுக்குப் பங்கீட்டு முறை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எதிர்கால சந்தை நிலைமையைப் பொறுத்தே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என எரிசக்தி முகமையின் பொது இயக்குநர் கரோலின் அசெரப் (Caroline Asserup) தெரிவித்துள்ளார்.

செய்தி

தமிழகத்தில் தாக்கப்பட்ட இலங்கை மீனவர் – வன்மையாக கண்டித்த நாமல்

  • April 28, 2026
  • 0 Comments

தமிழகத்தில் இலங்கை மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டமையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூர் காவல்துறையினர் முன்னிலையில் , தமிழக மீனவர்களால் அந்த மீனவர் தாக்கப்பட்டதாகக் கூறிய நாமல், அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்து, அவரை விரைவாகத் தாயகம் திரும்புவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். […]

செய்தி

ஈரானுடன் இணைந்து சதி செய்ததாக குற்றச்சாட்டு- பஹ்ரைனில் ஐவருக்கு ஆயுள் தண்டனை

  • April 28, 2026
  • 0 Comments

ஈரானுடன் (Iran) இணைந்து பயங்கரவாத மற்றும் விரோதச் செயல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு பஹ்ரைன் (Bahrain) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பஹ்ரைனின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின்படி, இரண்டு ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டினரும், மூன்று பஹ்ரைன் குடிமக்களும் இந்த தண்டனை பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில், பஹ்ரைன் இராச்சியத்திற்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொள்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், பஹ்ரைனுக்கு எதிரான ஈரானின் […]

செய்தி

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்..

  • April 28, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக இந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். […]

செய்தி

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடு வரலாம்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார். எனினும், முழுமையான தடை குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரபுக்கள் சபையுடன் ஏற்பட்ட விவாதத்திற்குப் பின்னர், 16 வயதுக்குட்பட்டோருக்கு வயது வரம்பு அல்லது பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இதுதொடர்பில் அரசாங்கம் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் பயனுள்ளதாகவும் […]

செய்தி

ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்

  • April 28, 2026
  • 0 Comments

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் […]

செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் முரண்பாடு காணப்படுவதாக கன்சர்வேடிவ் குற்றச்சாட்டு

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party)  தலைவர் கெமி படேனொக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) நாடாளுமன்றத்தை பலமுறை தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும், தற்போது தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கான பல்வேறு கதைகளை கூறி வருகிறார் என்றும் அவர் குற்றம் சுமத்தினார் ஸ்டார்மரை சிறப்புரிமை குழு (Privileges Committee) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு  ஆதரவாக வாக்களிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், […]

செய்தி

போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது அருவருப்பானது – பிரதமர்

  • April 27, 2026
  • 0 Comments

போதைப்பொருட்களை முழுமையாக தடை செய்வதை விட அவற்றை சட்டபூர்வமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்த வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் போலான்ஸ்கி (Zack Polanski)தெரிவித்துள்ளார். போதைப்பொருளால் ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆகவே ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய தடுப்பு கொள்கை தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர் கடுமையான போதைப்பொருட்கள் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஞ்சா போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படலாம் […]

செய்தி

ஸ்டார்மர் மீது விசாரணை நடத்தலாமா? நாளை வாக்கெடுப்பு

  • April 27, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) காமன்ஸ் சபையை தவறாக வழிநடத்தியாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் இன்று (Sir Lindsay Hoyle) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவாதம் நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் […]

செய்தி

புதுச்சேரியில் பாடசாலைகளில் இந்தி திணிப்பிற்கு திமுக மற்றும் அதிகமுக எதிர்ப்பு

  • April 27, 2026
  • 0 Comments

இந்தியாவின் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி சேர்க்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோன்று அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடசாலைகளில் 2026 – 27 ஆம் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’ இன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பாடசாலைளுக்கு […]

error: Content is protected !!