ஜனாதிபதி அநுரவுக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் பெருமையடைகிறேன். உங்களின் கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள்” என கூறியுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சமூக ஊடக உரையாடல், இலங்கை மற்றும் தமிழக உறவுகளின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





