செய்தி

ஸ்டார்மர் மீது விசாரணை நடத்தலாமா? நாளை வாக்கெடுப்பு

  • April 27, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) காமன்ஸ் சபையை தவறாக வழிநடத்தியாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் இன்று (Sir Lindsay Hoyle) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவாதம் நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் […]

செய்தி

புதுச்சேரியில் பாடசாலைகளில் இந்தி திணிப்பிற்கு திமுக மற்றும் அதிகமுக எதிர்ப்பு

  • April 27, 2026
  • 0 Comments

இந்தியாவின் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி சேர்க்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோன்று அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடசாலைகளில் 2026 – 27 ஆம் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’ இன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பாடசாலைளுக்கு […]

செய்தி

தையிட்டியில் தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

  • April 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். இந்தக் காணிகளை நாளைய தினம் அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 17 வருடங்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராடி வரும் நிலையில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]

இலங்கை செய்தி

போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பாதுகாப்பு அமைச்சர்

  • April 27, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என கூறிய அவர் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக ந டவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

  • April 27, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுதது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக அந்த பகுதிக்கு நேற்று(26) காலை சென்றிருந்த போது பெண்ணொருவருடன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அவரை நோக்கி குறித்த பெண் கல்வீச்சு தாக்குதலை […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிளை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

  • April 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் இரவு விருந்தின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேக நபர், கலிபோர்னியா (California) மாநிலத்தின் டொரன்ஸ் (Torrance) பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் (Cole Thomas Allen) என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப் (Trump) நிர்வாக உறுப்பினர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (Attorney General) டாட் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் அதிக நேரம் வீணாகிறது – அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் 

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தொடர்பான சர்ச்சை குறித்து அதிக நேரம் செலவிடப்படுவதாக அமைச்சரவை அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில், மண்டேல்சனின் விவகாரத்திலேயே கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறினார். மேலும், மண்டேல்சனின் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்பது கடந்த வாரமே தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

இலங்கை செய்தி

வவுனியாவில் தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வநாயகத்தின் 49 ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இந்த நிகழ்வுது இடம்பெற்றிருந்தது. இதன்போது, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் கட்சி […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 02 வயது சிறுமியை பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது

  • April 26, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை அவரது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. […]

error: Content is protected !!