ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரான்மீது இன்றிரவும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில். கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுள்ள ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினார். இதன்போது இது பற்றி கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “கடந்த இரவில் நாம் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம். இன்று இரவும் அவர்கள் […]

இப்போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 8-வது கோலை பதிவு செய்து, தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான 'தங்கக் காலணி' (Golden Boot) விருதுப் பந்தயத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். செய்தி விளையாட்டு

Golden Boot பந்தயம்:மெஸ்ஸி மீண்டும் முதலிடம்

  • July 8, 2026
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் (Round of 16) சுற்றில் எகிப்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 8-வது கோலை பதிவு செய்து, தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான ‘தங்கக் காலணி’ (Golden Boot) விருதுப் பந்தயத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். உலகக் கிண்ணத் தொடரின் இறுதியில் அதிக கோல்களை அடிக்கும் வீரருக்கு FIFA தங்கக் காலணி […]

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

  • July 8, 2026
  • 0 Comments

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அதற்கமைய, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் […]

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை உலகம் செய்தி

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பரபரப்பான அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலையானது திடீரென ஆறு சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 78 டாலராக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அரசுப் பத்திரங்களின் வருவாயும் (Government Bond Yields) அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழல் வெடித்துள்ளதால், […]

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது: இனி பேச்சு இல்லை- ட்ரம்ப் காட்டம்

  • July 8, 2026
  • 0 Comments

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே கையெழுத்திடப்பட்ட இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தமானது, நிரந்தர உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக 60 நாட்கள் அவகாசத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனினும், கடந்த வாரம் கட்டாரில் இரு நாடுகளுக்கும் […]

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா? அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா?

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேசம்வரை சென்றுவிட்டது. எனவே, முறையான விசாரணை இடம்பெறாவிட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகூட இல்லாமல்போகக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கூட்டு எதிரணிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு , “நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து, அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம். இப்படியான அரசியல் கலாசாரத்தையே தேசிய […]

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகள் மீண்டும் அமுல்

  • July 8, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இதற்கான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு […]

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. செய்தி விளையாட்டு

காலிறுதிக்குள் நுழைந்த அணிகள் எவை?

  • July 8, 2026
  • 0 Comments

  பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை […]

முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

தொடரும் கைது வேட்டை – முன்னாள் அமைச்சரும் சிக்கினார்

  • July 8, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (08) காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கொள்முதல் நடைமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

"நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் இப்படி நடந்திருக்கவே கூடாது: அமைச்சர் ஆதங்கம்

  • July 8, 2026
  • 0 Comments

“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு: “நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள […]