இலங்கை செய்தி

சைபர் கும்பலிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்! விசாரணை தீவிரம்!

  • April 23, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் திறைசேரிக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது, மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களை இணைய ஊடுருவிகள் இடைமறித்து மாற்றியமைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவு தொடர்பாகவும், இதேபோன்ற […]

செய்தி

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள்!

  • April 23, 2026
  • 0 Comments

சென்னை , நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இந்த தேர்தலில் சென்னை – பெரம்பூர் மற்றும் […]

செய்தி விளையாட்டு

உலக்கிண்ண தொடரில் இருந்து ஈரானை நீக்குமாறு ட்ரம்பின் தூதுவர் யோசனை!

  • April 23, 2026
  • 0 Comments

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை இணைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான பாலோ ஜாம்போலி Paolo Zampolli கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் ட்ரம்பின் மிக முக்கிய சகாக்களில் ஒருவராகக் அறியப்படுகின்றார். ஊலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளில் அமெரிக்காவில் இருந்து மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் FIFA ஈரான் கோரி இருந்தது. இதனை ஏற்கவில்லை. எனினும், ஈரான் உலக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என FIFA அறிவித்திருந்தது. […]

விளையாட்டு

முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல்!

  • April 23, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians , Chennai Super Kings  ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க அதிக […]

விளையாட்டு

2ஆவது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி!

  • April 23, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது. லக்னோவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (22) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (8) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். முகமது ஷமி, மொஹ்சின் கான் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 […]

உலகம் செய்தி

அமெரிக்க கடற்படை பிரதானி ராஜினாமா!

  • April 23, 2026
  • 0 Comments

அமெரிக்க கடற்படைச் செயலாளர் John Phelan தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் சூழலில், இவரது வெளியேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவ் தற்காலிகமாக இப்பணியை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்தாலும், John Phelanவிலகுவதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் […]

இலங்கை செய்தி

மரத்துடன் மோதி பஸ் விபத்து: கிண்ணியாவில் 19 பேர் காயம்!

  • April 22, 2026
  • 0 Comments

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை பாலத்திற்கு அருகே பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கிண்ணியா , மூதூருக்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்ஸொன்றே இன்று (22) மாலை வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தோர் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  

உலகம் செய்தி

ஓரிரு நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு: ட்ரம்ப் தகவல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடன் அடுத்த சில நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இதற்கமைய அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே உரையாடல் தொடங்கலாம் என அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய ஒருங்கிணைந்த திட்டத்தை ஈரான் அரசு தயாரிப்பதற்காக, டிரம்ப் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் […]

இலங்கை செய்தி

பௌத்த மயமாக்கலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

  • April 22, 2026
  • 0 Comments

தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருந்தது. போராட்டத்தில் பங்கேற்றோர், பௌத்தமயமாக்கலை வன்மையாகக் கண்டித்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.  

உலகம் செய்தி

போர் விதி மீறல்: இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இருவர் பலி!

  • April 22, 2026
  • 0 Comments

லெபனான் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி பகுதியில் காரொன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த விதிமுறையை மீறியதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காசாவிலும் போர் நிறுத்தம் அமுலில் […]