உலகம் செய்தி

அமைதி முயற்சி- ஈரானுக்கு துணை நிற்கும் சீனா

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினர்.

இந்த இராஜதந்திர முன்னெடுப்பில் சீனாவின் பங்களிப்பிற்கும் ஆதரவிற்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொறுப்பான அணுகுமுறையை பாராட்டிய சீன வெளிவிவகார அமைச்சர் , இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்துவதில் உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் சவால்களைத் தீர்க்கவும் மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தம் அவசியம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஜுன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி