அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: ஹார்முஸ் நீரிணை திறப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும். […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... உலகம் செய்தி

அடுத்த 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எனினும், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளதென தெரியவருகின்றது. Nabatieh நகரம் உட்பட 20 இடங்களிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட வலயத்திற்குள் உள்ள Rihan மற்றும் Sujud உள்ளிட்ட பல கிராமங்களைக் குறிவைத்து […]

உலகம் செய்தி

உச்சத் தலைவரின் இறுதிச் சடங்கு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜுலை 04 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறும் என்று ஈரான் அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவரது மகன் முஜ்தபா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈரான்மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 70 இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • June 13, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இந்த வான்வழித் தாக்குதல்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிர்த்தரப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மோதலில் பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஐந்து பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனான் இராணுவ வீரர் ஒருவரும் இந்தத் […]

இலங்கை செய்தி

பிரபாகரனின் இளைய மகன் குறித்து டக்ளஸ் பரபரப்பு தகவல்

  • June 13, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா […]

இலங்கை செய்தி

கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • June 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீரெனக் காணாமல்போயுள்ளார். இது குறித்துக் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தொடர் தேடுதல்களின் போது, சிறுவனின் வீட்டுக்கு […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் சுவிஸில் கைச்சாத்து: பாகிஸ்தான் ஏற்பாடு!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், தொடர்பில் சுவிட்சர்லாந்திலுள்ள தமது நாட்டுப் பிரதிநிதியுடன் முக்கியக் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இந்த அமைதி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட எடுக்கப்படும் இந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து வரவேற்றுள்ளது. அமெரிக்கா […]

செய்தி பொழுதுபோக்கு

செப்டம்பர் 04 திரைக்கு வருகிறது ‘மண்டாடி’!

  • June 13, 2026
  • 0 Comments

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படம் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதலீடு செய்ய அணிதிரளும் சீன நிறுவனங்கள்!

  • June 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்” காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN தெரிவித்தார். குறிப்பாக, கொழும்பு துறைமுக […]

இந்தியா செய்தி

தீவிரமடைகிறது ‘எல் நினோ’!

  • June 13, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் ‘எல் நினோ’ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு […]