அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்பின் சகாக்கள் அதிருப்தி

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கிலான டாலர் பணத்தை வீணடிப்பதாகவும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், லெபனான் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாத […]

தமிழக முதல்வர் விஜயை, நடிகை சமந்தா சந்தித்து வாழ்த்து கூறினார். செய்தி பொழுதுபோக்கு

முதல்வர் விஜயை குளிரவைத்த சமந்தாவின் பதிவு

  • June 18, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யை, நடிகை சமந்தா சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தி, தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடித்தவர் சமந்தா. எனினும், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை , சமந்தா சந்திப்பது இது முதன்முறையாகும். முதலமைச்சரை சந்தித்த பிறகு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சமந்தா, மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ” நான் சென்னைக்கு வந்தபோது, […]

பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தியா செய்தி

ட்ரம்பின் பாதுகாப்பு உத்தரவாதம் கோரிய மோடி

  • June 18, 2026
  • 0 Comments

இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற G7 மாநாட்டில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால் இரு நாடுகள் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு ஜனாதிபத ட்ரம்பை , பிரதமர் மோடி […]

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேற்று நேரில் அவதானித்தார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழின அழிப்பின் உறுதியான சாட்சியே செம்மணி

  • June 18, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித […]

பனாமாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி கோலை அடித்த கானாவின் Caleb Yirenkyi வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது.... செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் சாதித்தது கானா அணி

  • June 18, 2026
  • 0 Comments

கனடாவின் டொராண்டோ மைதானத்தில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து Group L லீக் போட்டியில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5′ நிமிடம்), கானா வீரர் கேலப் யிரென்கி Caleb Yirenkyi அடித்த அதிரடி கோல் அணியின் வெற்றியை உறுதி செய்தது. கானா ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மைதானத்தில் இந்த வெற்றியைத் துள்ளிக் […]

இங்கிலாந்தின் முன்கள வீரர் ஹாரி கேன் கோலை அடித்த பின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணியின் வெற்றி வேட்டை ஆரம்பம்

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா, டெக்சாஸில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி , குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் Harry Kane இரண்டு முக்கிய கோல்களை அடித்ததுடன், ஜூட் பெல்லிங்ஹாம் Jude Bellingham மற்றும் மார்கஸ் ராஷ்போர்ட் Marcus Rashford ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். புதிய பயிற்சியாளர் தாமஸ் துஷெல் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தற்காப்பு ஆட்டத்தில் சில […]

அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் உச்ச தலைவர் மற்றும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து – ஹார்முஸ் நீரிணை திறப்பு

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” இரு நாடுகளின் தலைவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், மத்தியஸ்தர் என்ற முறையில் என்னாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரசாங்கங்களின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் இரு தரப்பினருக்கும் […]

இலங்கை செய்தி

செம்மணியில் குடும்பம் குடும்பமாக மக்கள் கொன்று புதைப்பு

  • June 18, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வின்போது... இலங்கை செய்தி

இலங்கையில் மிகப்பெரிய மனித புதைகுழியாக மாறிய செம்மணி

  • June 17, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி புதைகுழி இன்று பதிவாகியுள்ளது. இன்றைய அகழ்வாய்வின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட […]

உலகம் செய்தி

அமைதி முயற்சி- ஈரானுக்கு துணை நிற்கும் சீனா

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர முன்னெடுப்பில் சீனாவின் பங்களிப்பிற்கும் ஆதரவிற்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். ஈரானின் பொறுப்பான அணுகுமுறையை பாராட்டிய சீன வெளிவிவகார அமைச்சர் , இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்துவதில் உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். பிராந்தியத்தில் நிலவும் சவால்களைத் தீர்க்கவும் மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தம் அவசியம் என்பதை […]