ட்ரம்பை சந்திப்பதற்காக வாஷிங்டன் பறந்தார் லெபனான் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் (Joseph Aoun) வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து பெய்ரூட்டில் உள்ள ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளை மாளிகையில் இருதரப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, லெபனானின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு போர் நிறுத்தத்தை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.
லெபனான் மற்றும் குறிப்பாக தெற்குப் பகுதியில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பது, லெபனானின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றுவது மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் லெபனான் அரசின் அதிகாரத்தை விரிவாக்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.




