சுரேஷ் சலே, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நிராகரித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஆடைகள் களையப்பட்டு சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு

  • June 18, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேற்படி விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி, முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படுவதாகவும் அமைச்சர் இன்று (18) சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணையின்போது சுரேஷ் சலே, கடுமையான முறையில் நடத்தப்பட்டார் மற்றும் அவமதிக்கப்பட்டார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி குறித்து மக்கள் மத்தியில் அச்சம்

  • June 18, 2026
  • 0 Comments

“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” இவ்வாறு மேற்படி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது […]

யாழில் ரயில் விபத்தில் பலியான ராணுவ சிப்பாயின் சடலம் இலங்கை செய்தி

யாழில் ரயில் மோதி ராணுவச் சிப்பாய் பலி

  • June 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், அரியாலை-நெளுக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்,பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட […]

சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் Rafael Grossi உலகம் செய்தி

ஈரானில் களமிறங்க தயாராகும் சர்வதேச அணுசக்தி அமைப்பு

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை Atomic Energy Agency தற்போது முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல் இருக்கவும், கையிருப்பில் உள்ள யுரேனியத்தை முறையாகக் கையாளவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்த இரு தரப்பினரும் நல்லெண்ணத்துடன் செயல்படுவார்கள் என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் Rafael Grossi நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்தெந்த இடங்களைப் பரிசோதிக்க வேண்டும் என்பது […]

கொலம்பியாவின் Luis Diaz இரண்டாவது கோலை அடித்த பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். செய்தி விளையாட்டு

அதிர்ந்தது அரங்கம்: கொலம்பியா வெற்றிநடை

  • June 18, 2026
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘கே’ பிரிவு (Group K) லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி தனது உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது. மெக்சிகோ சிட்டியின் புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் 80,000-க்கும் அதிகமான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது. இத்தாலியின் முன்னாள் நட்சத்திர வீரர் பாபியோ கன்னவாரோவின் (Fabio Cannavaro) பயிற்சியின் கீழ் களம் கண்ட உஸ்பெகிஸ்தான் அணி, […]

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் எப்போதும் பகைமை உணர்வே இருந்து வருகின்றது. ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்வதுகூட இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை. இஸ்ரேல் மற்றும் ஈரானின் தேசியக் கொடிகளை காண்பிக்கும் படம் இது. உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: ஈரான் கடும் எச்சரிக்கை

  • June 18, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்திய பின்னரும், இஸ்ரேல் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனான்மீதான தாக்குதலும் இருத்தப்பட […]

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பதவி வகித்த சுகீஸ்வர பணடார இலங்கை செய்தி

இரட்டை சம்பளம்: கோட்டாபயவின் செயலாளர் கைது

  • June 18, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நடப்பு விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்குரிய சம்பளம் மற்றும் மேலுமொரு அரச பதவிக்குரிய […]

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதையடுத்து சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது. குறித்த நீரிணைமீள திறக்கப்பட்டது உலக நாடுகளுக்கு ஆறுதல் அளிக்கின்றது. உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தினால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதையடுத்து சர்வதேச சந்தையில், எகிறிய கச்சா எண்ணெய் விலை சரிய ஆரம்பித்தது. இந்நிலையில் இணையவழியில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு விலை மேலும் குறைவடைந்துள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து பாதை மீண்டும் திறக்கப்பட்டது சந்தையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரத் தொடக்கத்தில் சுமார் 86 டாலராக இருந்த […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் நாளை நேரடி பேச்சு!

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து, Buergenstock நகரில் நாளை இடம்பெறவுள்ளதை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த முக்கியத்துவமிக்க சந்திப்பில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் சமரசத் தீர்வாளர்களாகப் பங்கேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளன. ஏற்கனவே இரு நாட்டுத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைய வழியில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த நேருக்கு நேர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு நடைபெறாது என்று ஈரான் […]

வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சடலமாக பெண் மீட்கப்படும் காட்சி. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கள ஆய்வை மேற்கொண்டனர். இலங்கை செய்தி

காதலி சடலமாக மீட்பு – காதலனுக்கு வலை: நடந்தது என்ன?

  • June 18, 2026
  • 0 Comments

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். உயிரிழந்த பெண் நேற்று (17) சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் (16) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கி இருந்துள்ளார். வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷியாமா தர்ஷனி (33) என்ற இப்பெண், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். கன்னொருவ பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் கடந்த […]