ஆடைகள் களையப்பட்டு சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு
அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேற்படி விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி, முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படுவதாகவும் அமைச்சர் இன்று (18) சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணையின்போது சுரேஷ் சலே, கடுமையான முறையில் நடத்தப்பட்டார் மற்றும் அவமதிக்கப்பட்டார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட […]













