உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் எப்போதும் பகைமை உணர்வே இருந்து வருகின்றது. ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்வதுகூட இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை. இஸ்ரேல் மற்றும் ஈரானின் தேசியக் கொடிகளை காண்பிக்கும் படம் இது.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்திய பின்னரும், இஸ்ரேல் கட்டுப்படுவதாக தெரியவில்லை.

இந்நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான்மீதான தாக்குதலும் இருத்தப்பட வேண்டும் என ஈரான் ஆரம்பம் முதலே வலியுறுத்திவருகின்றமை தெரிந்ததே.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி