சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தினால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.
இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதையடுத்து சர்வதேச சந்தையில், எகிறிய கச்சா எண்ணெய் விலை சரிய ஆரம்பித்தது.
இந்நிலையில் இணையவழியில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு விலை மேலும் குறைவடைந்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து பாதை மீண்டும் திறக்கப்பட்டது சந்தையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரத் தொடக்கத்தில் சுமார் 86 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, தற்போது 74.80 டாலராக குறைவடைந்துள்ளது.




