இலங்கை செய்தி

இரட்டை சம்பளம்: கோட்டாபயவின் செயலாளர் கைது

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பதவி வகித்த சுகீஸ்வர பணடார

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நடப்பு விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்குரிய சம்பளம் மற்றும் மேலுமொரு அரச பதவிக்குரிய சம்பளம் என இரண்டு சம்பளங்களை அவர் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை