மூட நம்பிக்கையின் உச்சம்: சிறுவன் பலி! நடந்தது என்ன?
பாம்பு தீண்டலுக்கு இலக்கான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால் அச்சிறுவன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். இந்தியா, உத்தர பிரதேசத்திலேயே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது. அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, பெற்றோர் மந்திரவாதியை நாடியுள்ளனர். குறித்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் […]













