செய்தி விளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதல்

ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது.

ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது.

அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5T 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்​ளது.

அயர்​லாந்து ஆடு​களத்​தில் இந்​திய அணி வீரர்​கள் துடுப்பெடுத்தாட சிரமப்​பட்​டனர். 15 வயதாகும் அதிரடி வீர​ரான வைபவ் சூர்​ய​வன்​ஷிக்கு அயர்​லாந்து தொடரில் வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

இது விவாதப் பொருளாக மாறி​யிருந்​தது. எனினும் இங்​கிலாந்து தொடரிலும் சூர்​ய​வன்​ஷிக்கு வாய்ப்பு வழங்​கப்​படுவது சந்தேகமே.

ஒருவேளை அவர், களமிறங்​கும் பட்​சத்​தில் சஞ்சு சாம்சன் அல்​லது இஷான் கிஷன் நீக்​கப்​படக்​கூடும்.

சஞ்சு சாம்சன் அயர்​லாந்​துக்கு எதி​ரான முதல் போட்​டி​யில் 5 ரன்​களும், 2 ஆட்​டத்​தில் ரன் ஏதும் எடுக்​காமலும் வெளி​யேறி இருந்​தார். இஷான் கிஷன் இரு ஆட்​டங்​களை​யும் சேர்த்து 13 ரன்​கள் எடுத்திருந்​தார்.

அயர்​லாந்து தொடரில் ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்​மா, அபிஷேக் சர்மா உள்​ளிட்ட முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரிடம் இருந்து பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை.

கடைசி போட்​டி​யில் வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக திலக் வர்மா தடு​மாறி​னார். அவர், அரை சதம் அடித்த போதி​லும் 46 பந்​துகளை எதிர்​கொண்டு 55 ரன்​களே சேர்த்​தார்.

இதனால் இங்​கிலாந்​துக்கு எதி​ரான தொடரில் இவர்​கள் கவன​முடன் செயல்​படக்​கூடும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி