உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (01) கைவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைல் இதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையைப் பின்பற்றியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தார்.




