அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்கவைக்கவே ‘கைது வேட்டை’- கதறுகிறார் விமல்

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“அரச ஊழியர்கள் தமக்கென ஒரு வாகனம் கொள்வனவு செய்யும் யுகத்தை உருவாக்குவோம் என ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்று 20 கிலோ அரிசி கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

அரசாங்க ஊழியர்களே, இந்த அரசாங்கத்துக்கு தபால்மூலம் வாக்குகளை அள்ளிவழங்கினர். ஆனால் அரசாங்க ஊழியர்கள்மீது விமர்சனக்கணை தொடுக்கப்படுகின்றது.

விவசாயிகளும் வாக்களித்தனர். ஆனால் விவசாயிகள் கசிப்பு காரர்கள் என ஆளுங்கட்சியினரால் விமர்சிக்கப்படுகின்றனர்.
இந்த ஆட்சியின்கீழ் அபிவிருத்திகள் இடம்பெறவில்லை.

தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவருகின்றனர். கைது வேட்டை மூலமே தமது இருப்பை தக்கவைத்துவருகின்றனர்.”-என்றார் விமல் வீரவன்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை