வயிற்றில் குத்திய கம்பியை அகற்றி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்
கிண்ணியா – பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதிலில் இருந்து கீழே விழுந்ததில், அங்கு கொங்கிரீட் போடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பி அவரது அடிவயிற்றைத் துளைத்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வயிற்றில் கம்பியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞர், உடனடியாகக் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் (Ambulance) மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சத்திரசிகிச்சை (அறுவைசிகிச்சை) […]













