இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இரு கைதிகள் குழுக்களுக்கிடையில் நேற்று மதியம் மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், 34 பேர் வரை காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலை நேற்று இரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று மீண்டும் இந்த மோதல் வெடித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை