பசுபிக் கடலில் ஏவுகணை சோதனை
சீன இராணுவம் பசுபிக் பெருங்கடலில் இன்றைய தினம் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது.
இது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் விமர்சனங்களையும் கவலைகளையும் ஈர்த்துள்ளது.
மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையைச் சேர்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் போலிப் போர்க்குண்டைச் ஏற்றி சோதனை செய்யப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஏவுகணை “குறிப்பிட்ட கடல் பகுதியில்” விழுந்ததாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் வழங்கப்படவில்லை.
இந்த ஏவுகணைச் சோதனையை, சீனாவின் வருடாந்திர இராணுவப் பயிற்சியின் ஒரு “வழக்கமான ஏற்பாடு” என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் விவரித்துள்ளது.





