இலங்கை

இலங்கையில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

  • June 2, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படிஇ இன்று (02) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 147000 ரூபாவாக  பதிவாகியுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை 152 600 ரூபாவாக காணப்பட்ட ’22 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை 5600 ரூபாவால் இவ்வாறு குறைந்துள்ளது. இதனிடையே கடந்த வௌ்ளிக்கிழமை 165000 ரூபாவாக இருந்த ’24 கரட்’ ஒரு பவுன் தங்கம்  இன்றைய தினம் 159 000 […]

ஐரோப்பா

பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைன் – விரட்டியடித்த ரஷ்ய ராணுவம் (வீடியோ)

  • June 2, 2023
  • 0 Comments

பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைனிய ராணுவத்தை தடுத்து நிறுத்தி இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது, தற்போது கிட்டத்தட்ட 16 மாதங்களாக மிக நீண்ட போராக நீடித்து வருகிறது.ரஷ்ய படைகள் உக்ரைனின் சில இடங்களை பிடித்து வைத்து இருக்கும் நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைனிய ஆயுதப் படை எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தலைநகர் கீவ் […]

இலங்கை

தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்தியானா நிறுவனம் : விசாரணைகள் ஆரம்பம்!

  • June 2, 2023
  • 0 Comments

இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்திய மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குஜராத்தில் இயங்கி வரும் மருந்த தயாரிப்பு நிறுவனமான இந்தியானா நிறுவனம் வழங்கிய மருந்தினால் இலங்கையில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்த இந்திய மருந்து ஏற்றுமதி கவுன்சில், சம்பவம் குறித்து உள் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, சர்ச்சைக்குரிய மருந்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவும், வழங்கப்பட்ட […]

இலங்கை

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் கணவன் செய்த செயல் !

  • June 2, 2023
  • 0 Comments

தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால் அவரது சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மனைவியின் சடலத்தை புதைத்த குற்றச்சாட்டில் அவரது கணவர் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணான செயல் என்பதாலேயே கணவர் கைது செய்யப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் விஜயபுர, பண்டுகாபய புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தனது […]

செய்தி

“பொன்னியின் செல்வன் 2” படத்திற்கு வந்த சோதனை! என்ன நடந்தது தெரியுமா?

  • June 2, 2023
  • 0 Comments

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கல்கி, தென்னகத்தை ஆண்ட சோழ மன்னனான ‘அருண்மொழி வர்மன்’ பற்றிய கதையை, வரலாற்று சுவடுகளுடன் புனையப்பட்ட நாவலாக எழுதிய நாவல் ‘பொன்னியின் செல்வன்’. இதனை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய […]

தென் அமெரிக்கா

காதலனின் ஆசைக்காக பின்னழகை அதிகரித்த அழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

  • June 2, 2023
  • 0 Comments

தன் காதலனின் ஆசைப்படி தன் பின்னழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண், பரிதாபமாக பலியாகியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகிய மொடலான Lygia Fazio (40)வின் காதலன், அவரது பின்னழகை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி, அழகியல் அறுவை சிகிச்சை ஒன்றை செய்துகொண்டுள்ளார் Lygia. ஆனால், பின்பக்கத்தை பெரிதாக்குவதற்காக உடலுக்குள் பொருத்தப்பட்ட பை சிதைந்து, அதிலுள்ள ரசாயனங்கள் Lygiaவின் உடல் முழுவதும் பரவிவிட்டன. அவற்றை அகற்றுவதற்காக மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டார் Lygia.ஆனால், கடந்த மாதம் […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில், மனித எச்சங்கள் அடங்கிய பைகள் மீட்பு!

  • June 2, 2023
  • 0 Comments

மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை  மீட்டுள்ளனர். கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய குறித்த பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதில், ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை . மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் […]

ஐரோப்பா

இத்தாலியில் 7 மாத கர்ப்பிணியை குத்தி கொலை செய்த காதலன்..!

  • June 2, 2023
  • 0 Comments

இத்தாலியிலுள்ள மிலனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தன் காதலனான Alessandro Impagnatiello (30)உடன் வாழ்ந்துவந்த ஏழு மாத கர்ப்பிணியான Giulia Tramontano (29), ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக கிடைத்த தகவலின்பேரில். பொலிஸார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள். Giulia தன் காதலனுடன் வாழ்ந்துவந்த வீட்டை பொலிஸார் சோதனையிடும்போது, அங்கு இரத்தத்துளிகள் கிடப்பதைக் காணவே, பொலிஸாரின் சந்தேகம் Giuliaவின் காதலனான Alessandro மீது திரும்பியுள்ளது.சுமார் மூன்று நாட்கள் விசாரணைக்குப்பின், புதன்கிழமை நள்ளிரவு, தான்தான் Giuliaவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் Alessandro. […]

வட அமெரிக்கா

கனடாவில் முகநூல் பயன்பாட்டாளர்களுக்கான விசேட அறிவுறுத்தல்

  • June 2, 2023
  • 0 Comments

கனடாவில் முகநூல் மட்டும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு அவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களிலும் செய்திகளை முடக்கும் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.ஏற்கனவே கனடாவில் google நிறுவனம் இதேபோன்று செய்திகளை முடக்கும் ஓர் பரீட்சார்த்த முயற்சியை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்தது. லிபரல் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பில் சி-18 என்னும் சட்டம் காரணமாக இவ்வாறு பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த சட்டத்தின் […]

இலங்கை

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  • June 2, 2023
  • 0 Comments

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண் சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அப்பகுதியிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.