இலங்கை

தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்தியானா நிறுவனம் : விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்திய மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குஜராத்தில் இயங்கி வரும் மருந்த தயாரிப்பு நிறுவனமான இந்தியானா நிறுவனம் வழங்கிய மருந்தினால் இலங்கையில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்த இந்திய மருந்து ஏற்றுமதி கவுன்சில், சம்பவம் குறித்து உள் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக, சர்ச்சைக்குரிய மருந்தின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவும், வழங்கப்பட்ட மருந்தின் இருப்பை திரும்பப் பெறவும் இந்திய நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தொடர்பாக நான்காவது முறையாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் மருந்து ஏற்றுமதி துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்நாட்டு மருந்து ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content