செய்தி விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார்.

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார்.

அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.

ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி FIFA உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதைக் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

மேலும், அவரது உடல்நிலை குறித்த தேவையற்ற தகவல்களைத் தவிர்க்குமாறும், ஊடகங்கள் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான கால்பந்து வாழ்க்கையில் அவரது தந்தை ஜார்ஜ் மிக முக்கியப் பங்கு வகித்தார்.

மெஸ்ஸியின் ஆரம்பக் கால ரொசாரியோ வாழ்க்கை முதல் பார்சிலோனா அணியின் வளர்ச்சி மற்றும் சர்வதேச போட்டிகள் வரை, அவரது வணிக ஒப்பந்தங்கள் மற்றும் களத்திற்கு வெளியே நடக்கும் அனைத்து முக்கியப் பேச்சுவார்த்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பிரதிநிதியாக அவரே செயற்பட்டார்.

காலமான ஜார்ஜ் மெஸ்ஸிக்கு, மனைவி செலியா குச்சிட்டினி (Celia Cuccittini) மற்றும் லியோனல், ரோட்ரிகோ, மத்தியாஸ், மரியா சோல் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி