ஐரோப்பா

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி : ஒரு தசாப்தத்தில் 10 மில்லியன் கொள்ளை!

  • February 13, 2026
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 09 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த செவ்வாய்க்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே  ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் […]

உலகம்

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் BNP வெற்றி நடை!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. எனப்படுகின்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party (BNP) வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தமது கட்சி பெற்றுள்ளது என BNP இன்று அறிவித்தது. இதற்கமைய பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் Tarique Rahman பதவி ஏற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் புரட்சி வெடித்தது. இதனையடுத்து மக்கள் போராட்டமும் […]

அரசியல் இலங்கை

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? பேராளர் மாநாட்டை நடத்துகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி!

  • February 13, 2026
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நிகழ்வுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்தே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், […]

ஆஸ்திரேலியா

9 மாதங்களுக்குள்ளேயே தலைமைப் பதவியை இழந்த ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர்!

  • February 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் Liberal Party புதிய தலைவராக ஆங்கஸ் டெய்லர் Angus Taylor தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனி அவரே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிரணி கூட்டணி தலைவராகவும் செயல்படுவார். கட்சியால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்று, கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்து செல்வதற்கு தீவிரமாக செயல்படபோவதாக அவர் உறுதியளித்துள்ளார். தலைமைப் பதவிக்காக கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே Sussan Ley , அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

பலஸ்தீனியர்களின் குடியுரிமை இரத்து – இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் சர்ச்சை

  • February 12, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பாலஸ்தீனியர்களின் குடியுரிமையை இரத்து செய்யும் அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின் பேரில், அந்த இருவரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலஸ்தீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது “ஆபத்தான முன்னுதாரணம்”  என்றும், ஆயிரக்கணக்கான கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளை இலக்குவைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு […]

இலங்கை செய்தி

மெட்ரோ பஸ் சேவை ஒகஸ்ட் முதல் அமுலுக்கு வருகிறது

  • February 12, 2026
  • 0 Comments

நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் […]

உலகம் செய்தி

ட்ரம்ப் அனுமதியுடன் மினசோட்டாவில் குடியேற்ற கண்காணிப்பு தீவிரம்

  • February 12, 2026
  • 0 Comments

மினசோட்டாவில் குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் அதிகரிக்கப்படும் என அமெரிக்க எல்லைப் பேரவைத் தலைவர் டாம் ஹோமன் தெரிவித்துள்ளார். இதற்காக அமெஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “இந்த நடவடிக்கையின் மேற்பார்வை மற்றும் வெற்றியை உறுதி செய்ய நான் மினசோட்டாவில் சிறிது காலம் தங்குவேன். உள்ளூர் அதிகாரிகள் கூட்டாட்சி குடியேற்ற அதிகாரிகளுடன் அதிக ஒத்துழைப்பு செய்ததால், தற்போது சரணாலயம் இல்லாத மாநிலமாக மினசோட்டா மாறிவிட்டது.” என்றார். இதுவரை, கடந்த […]

இலங்கை செய்தி

கடவுச்சீட்டு மற்றும் விசா விநியோகம் வழமைக்கு

  • February 12, 2026
  • 0 Comments

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு காரணமான கணினி அமைப்பிலிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது. இருப்பினும், தற்போது கணினி கட்டமைப்பு முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே, திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் 1962 என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது திணைக்களத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!

  • February 12, 2026
  • 0 Comments

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார். சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி […]

உலகம் செய்தி

பிரான்ஸிடமிருந்து 3.25 இலட்சம் கோடி ரூபாவுக்கு 114 ரபேல் போர் விமானங்களை பெறும் இந்தியா

  • February 12, 2026
  • 0 Comments

பிரான்சிடமிருந்து 3.25 இலட்சம் கோடி ரூபாவுக்கு 114 ரபேல் போர் விமானங்களை பெறும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். அவரது வருகையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனை முன்னிட்டு, இந்திய விமானப் படைக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்துக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு […]