இலங்கை

இலங்கையில் முழு அளவில் சமூக வலைத்தள பாவனையை தடைசெய்யப்படாது

  • October 4, 2023
  • 0 Comments

வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக இன, மத மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக […]

ஐரோப்பா

சிறுவர்களை பாதுகாக்க முதல் நிலத்தடிப் பாடசாலையை நிர்மாணிக்கும் உக்ரேன்

  • October 4, 2023
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கிலுள்ள கார்கிவ் நகரில் முதல் நிலத்தடிப் பாடசாலை கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்படப்டுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா அடிக்கடி நடத்தும் வெடிகுண்டு, ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நகரத்தின் மேயர் கூறினார். நிலத்தடிப் பாடசாலை இருந்தால் ஏவுகணைத் தாக்குதல்களின்போதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பாக நேரடிக் கல்வியைத் தொடரமுடியும் என்றாரவர். உக்ரேனில் போரினால் நிறையப் பள்ளிகள் இணையம்வழி கல்வியைக் கற்றுக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த செப்டம்பர் முதல் தேதி உக்ரேனில் புதிய கல்வி ஆண்டு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – கடன் உதவி மையங்களை நாடும் மக்கள்

  • October 4, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களின் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. தற்போதைய வாழ்க்கைச் செலவில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வங்கி வட்டி விகித அதிகரிப்பால், ஆஸ்திரேலியர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியர்கள் இப்போது பில்களை செலுத்துவதற்கு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன. கடன் அட்டைகள் ஊடாக மேலதிக கடன்களை பெற்றுக்கொள்வதன் காரணமாக அவுஸ்திரேலியர்கள் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடன் உதவி […]

ஐரோப்பா

நெருக்கடியில் ரஷ்யா – புட்டின் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • October 4, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேலதிகமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அதற்காக திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்க இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்பவர்களுக்கான வயதெல்லை 27 இல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, உக்ரேனுடனான யுத்தம் ஆரம்பமாகி 20 மாதங்களை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ஆயுத படையினர் உக்ரேனுடன் நீண்ட யுத்தத்தை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக முன்னர் விளாடிமீர் புட்டின் தெரிவித்திருந்தார். ரஷ்யாவினால் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிறுவனத்தில் CEO பதவி – AI தொழில்நுட்பத்தின் அதிரடி நடவடிக்கை

  • October 4, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், AI ஆல் இயங்கும் ரோபோ ஒன்று ஒரு நிறுவனத்திற்கு CEO-ஆக நியமிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் AI தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்கள் குறித்த அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் சிலர் இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தால் தற்போது வரை எவ்விதமான ஆபத்து இல்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கேள்வி […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட அகதியின் சடலம் – குழப்பத்தில் பொலிஸார்

  • October 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஆற்றில் இருந்து அகதி ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிரான்சின் வடக்கு பகுதியான Loon-Plage (Nord) நகரில் அகதிகள் முகாமிற்கு அருகே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற ஆற்றில் இருந்து அகதிக் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த ஆற்றுப்பகுதி அருகே அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த அகதி ஒருவரின் சடலமே அது என உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்பது தொடர்பில் உடற்கூறு பரிசோதனைகளின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 35 ஆயிரம் தாதிகளுக்கு பற்றாக்குறை – தீவிரமாக தேடும் அரசாங்கம்

  • October 4, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டுக்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை என்கின்ற விடயம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ஜெர்மனியில் மருத்துவ தாதிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. மொத்தமாக தற்பொழுது 35000 பேர் இவ்வாறு உடனடி தேவைகளில் உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது 35000 மருத்துவ தாதிமார்கள் பல லட்சக்கணக்கானவர்களை பராமறிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்பொழுது தேவைப்படுகின்றார்கள். மொத்தமாக 2003 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 2 மில்லியன் பேர் பாராமறிக்கப்பட […]

ஆசியா

சிங்கப்பூரில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பழக்கம்

  • October 4, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்திய 800 மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அவர் அது பற்றிய கேள்விக்குப் பதில் தந்தார். கடந்த ஐந்தாண்டில் மாணவர்களிடையே மின்சிகரெட் பழக்கத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்குமுன் சுமார் 50 மாணவர்களே சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என்று மாலிக்கி குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் மாணவர்களிடையிலும் பொதுவாகச் சமூகத்திலும் […]

செய்தி

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

  • October 4, 2023
  • 0 Comments

இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோவின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவுக்கு விற்கப்படுவதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விலைக்கு தேசிக்காய் களை கொள்வனவு செய்து, நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தேசிக்காய் அறுவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரித்த மைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய்ச் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

விளையாட்டு

இவ்வருட உலகக் கோப்பையை தவறவிடும் ஐந்து முக்கிய வீரர்கள்

  • October 3, 2023
  • 0 Comments

தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு, ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பொதுவாக அவர்களின் லட்சியம் மற்றும் அதை வெல்வது அவர்களின் தொழில் வாழ்க்கையின் மகுடமாகும். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களுக்கு, ஒருநாள் சர்வதேச (ODI) உலகக் கோப்பை ஒரு போட்டியாகும், ஆனால் பல உயர்தர வீரர்கள் நான்காண்டு போட்டிகளை தவறவிடுகிறார்கள். பெரும்பாலும் காயம் காரணமாக, ஆனால் சில சமயங்களில் தந்திரோபாய முடிவுகள் காரணமாக. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியா நடத்தும் 2023 […]