வடக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, நியமனங்கள் தொடர்பில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கோரிக்கைகள் முன்வைப்பு
வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்பித்தனர். இதன்போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் நிரஞ்சனும் சமூகமளித்திருந்தார்.யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (15) முற்பகல் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன. புதிய அதிபர் நியமனத்தால், […]













