இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 2,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மிஹி ஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்குப் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பவுளல்லர்.

இலங்கை

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • January 16, 2024
  • 0 Comments

இலங்கையின்  பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 1,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். வட மாகாணத்தில் 1,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை (16ஆம் திகதி) வெளியிடப்படலாம் என தேசிய டெங்கு […]

ஆசியா

ஒரு மில்லிமீட்டர் அளவு மீறினாலும் போர் வெடிக்கும் : வடகொரியா எச்சரிக்கை!

  • January 16, 2024
  • 0 Comments

வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் எல்லையில் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான எல்லையை தென்கொரியர்கள் மீறினால், அது போருக்கான ஆத்திரமூட்டலாகக் கருதப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரியா குடியரசு நமது பிராந்திய நிலம், காற்று மற்றும் நீர்நிலைகளில் 0.001 மில்லிமீட்டர் அளவு கூட மீறினால், அது போர் ஆத்திரமூட்டலாக கருதப்படும்” எனக் கூறியுள்ளார். நீண்டகாலமாக வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் போர் பதற்றம் நீடித்து வருகின்றது. சமீபத்தில் தென்கொரிய கடல்பகுதியில் […]

இலங்கை

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கும் டின் இலக்கம் அவசியமா?

  • January 16, 2024
  • 0 Comments

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையிலிருந்து வருமானம் […]

இலங்கை

இலங்கை : கொள்ளளவை கடந்து சிறைகளில் அடைக்கப்படும் கைதிகள்!

  • January 16, 2024
  • 0 Comments

சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை, சிறை அறைகளின் வார்டு கொள்ளளவை மீறுவதாகக் காட்டுகிறது. அறிக்கையின்படி, கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவழிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் […]

உலகம்

அமெரிக்காவின் கொள்கலன் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

  • January 16, 2024
  • 0 Comments

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க கொள்கலன் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். யேமன் கடற்பகுதியில் ஏடன் வளைகுடா கடல் பகுதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு பெட்டி சிறிது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஃகு பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

அயலான்.. நான்காம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • January 16, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று அயலான். இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர் .ஏலியனை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்பட்டம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு போராட்டத்திற்கு பின் வெளியாகி உள்ளது. […]

வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: ட்ரம்பை ஆதரிக்க முடிவு!

  • January 16, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வு போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராக்குவதற்காக பணியாற்றப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே தான் அதிபர் தேர்தலுக்கான போட்டி நிலவுகிறது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக உள்ளார்.இந்நிலையில் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி சூடுபிடித்துள்ளது. குடியரசு […]

இலங்கை

இலங்கை : காற்றின் தரம் குறித்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

  • January 16, 2024
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர்  அஜித் வீரசுந்தர தெரிவித்தார். இதன் காரணமாக சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள […]

மத்திய கிழக்கு

விரிவடைந்து செல்லும் போர்… இஸ்ரேலின் உளவு மையம் மீது ஏவுகணைத் தாக்குல் நடத்திய ஈரான்

  • January 16, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், இஸ்ரேலின் ’மொசாட்’ உளவு மையத்தின் மீது நேரடியாக ஏவுகணைத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது. இதனால் காசாவுக்குள் நிலைகொண்டிருக்கும் இருந்த போர், மத்திய கிழக்கில் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்குள் அத்துமீறி புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் சுமார்1200க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அக்.7 கோர நிகழ்வுக்கு பழிவாங்க இஸ்ரேல் சபதமிட்டது. அதன்படி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 100 நாட்களை கடந்துள்ளன. ஹமாஸ் அமைப்பினரை பூண்டோடு அழிப்பது, […]